சினிமா செய்திகள்
நயன்தாரா- விக்னேஷ் சிவன் படத்துக்கு மீண்டும் ஒரு சர்வதேச விருது- கவுரவப்படுத்திய இத்தாலி!
நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோரது தயாரிப்பில் ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில் வெளியிடப்பட்ட ‘கூழாங்கல்’ என்னும் திரைப்படத்துக்கும் மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
இயக்குநர் விநோத்ராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கூழாங்கல். இந்தத் திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தை நெதர்லாந்து ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு கடந்த படக்குழு அனுப்பியது. கூழாங்கல் படத்துக்கு உயரிய திரை விருதான ரோட்டர்டாம் விருது சிறந்த திரைப்படத்துக்காக வழங்கப்பட்டது. இந்தத் திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற அங்கீகாரத்தையும் கூழாங்கல் திரைப்படம் பெற்றது.
மேலும், நியூயார்க் நகரில் நடைபெற்ற புது இயக்குநர்களுக்கான திரைப்பட விழாவில் கூழாங்கல் திரையிடப்பட்டது. அங்கும் சிறந்த படத்துக்கான விருதை கூழாங்கல் படம் பெற்றது. தற்போது இத்தாலியில் நடைபெற்ற சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.
இதனால் இயக்குநர் விநோத்ராஜ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. விரைவில் ஓடிடி தளங்கள் ஏதாவது ஒன்றிலும் கூழாங்கல் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are immensely grateful and honored to have won the Best Feature Film voted by the jury of National Syndicate Critics Italian Film Critics, in the #ShorTSIFF, Italy ♥♥♥ #Nayanthara @VigneshShivN @PsVinothraj@ParthiDOP @AmudhavanKar @thecutsmaker @thisisysr https://t.co/AzVTrrStBu
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) July 12, 2021