சினிமா செய்திகள்

இன்று முதல் கோல்டை தொடங்குகிறார் நயன்தாரா!

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் திரை உலகில் எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் இன்றும் அவர் தான் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், ஜிகே விக்னேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படம், யுவராஜ் தயாளன் இயக்கும் திரைப்படம், அட்லி – ஷாருக்கான் திரைப்படம் மற்றும் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படம் என ஒரே நேரத்தில் 7 திரைப்படங்களில் நடிக்கும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அட்லி – ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்று இருந்த நயன்தாரா தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் அவர் நடிக்கும் ’கோல்ட்’ என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் திரைப்படம் இது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பிரேமம் படத்திற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு இதுவரை அவர் நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version