சினிமா செய்திகள்
விஜய் டிவி பேட்டியின்போது திடீரென அழுது கண்ணீர் வடித்த நயன்தாரா!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டியில் அவர் இதுவரை ஊடகங்களில் சொல்லாத பல்வேறு விஷயங்களை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த பேட்டியின் போது நயன்தாராவிடம் டிடி கேட்ட ஒரு கேள்விக்கு அவர் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வடித்தது பார்வையாளர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் நெகிழ வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பின்னோக்கி சென்று எதையாவது மாற்ற விரும்பினால் எதை மாற்றுவீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நயன்தாரா ’எனது தந்தை இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். அவர் மிகவும் கண்டிப்பானவர், ஒழுக்கமானவர், எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர். அவரை பார்த்து தான் நாங்கள் நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டோம். அப்படிப்பட்ட எனது தந்தை தற்போது 13 ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையில் உள்ளார். அவரை என்னுடைய அம்மா தான் இத்தனை ஆண்டுகளாக கவனித்து வருகிறார். எனவே அவர் மீண்டும் நாங்கள் சிறுவயதில் பார்த்த கம்பீரமான அப்பாவை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பதிலளித்தார்.
அதேபோல் விக்னேஷ் சிவன் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது விக்னேஷ் சிவனிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும் என்றும், பொதுவாக காதலிக்கும் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, வேலை செய்யக்கூடாது என்றுதான் பல ஆண்கள் நினைப்பார்கள் என்றும், ஆனால் விக்னேஷ் சிவன் எனது வேலைக்கு ஊக்கம் கொடுத்தார் என்றும் அவர் எனக்கு கிடைத்த பிறகுதான் அதிக அளவில் நான் வேலை பார்கிறேன் என்றும் என்றும் அவர் எனது வேலையை ஊக்குவிக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் தாய் மற்றும் தங்கை மீது மிகுந்த பாசம் உள்ளவர் விக்னேஷ் சிவன் என்றும் ஒவ்வொரு நாளும் அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்ட பின் தான் அவர் சாப்பிடுகிறார் என்றும் அந்த அளவிற்கு தாயிடமும் தங்கையிடமும் பாசமாக உள்ளவர் கண்டிப்பாக தனக்கு வரும் துணையையும் நன்றாக கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று கூறினார்.
மேலும் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கூறிய நயன்தாரா ஒரு படத்தை நாம் வலுக்கட்டாயமாக ரசிகர்களிடம் திணிக்கக் கூடாது என்றும், இந்த படம் நன்றாக இருக்கும் நான் சூப்பராக நடித்திருக்கிறேன் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், படத்தை பார்த்து ரசிகர்கள் தான் கருத்து சொல்லவேண்டும் என்றும், அதனால்தான் நான் புரமோஷனுக்கு வரவில்லை என்றும் கூறினார். மேலும் புரமோஷனுக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் நல்ல படம் என்றால் கண்டிப்பாக ஓடி விடும் என்றும், புரமோஷன் தான் ஒரு படத்துக்கு வெற்றி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நயன்தாராவின் இந்த சுவாரஸ்யமான பேட்டி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.