சினிமா செய்திகள்

அப்பாவின் ஆசைக்காக திருமணம்: சம்மதம் தெரிவித்தாரா நயன்தாரா?

Published

on

நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் சென்னையில் ஒரே வீட்டில்தான் தங்கி இருக்கின்றனர் என்பதும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் தந்தை நயன்தாராவை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசை தெரிவித்ததாகவும், இதனை அடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சமீபத்தில் கொச்சி சென்றதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்தினர்கள் மட்டும் கலந்து கொண்ட திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் வெளியார் யாருமே கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. திருமணம் கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற தனது அப்பாவின் ஆசையை நயன்தாரா நிறைவேற்றி உள்ளதாகவும் விரைவில் ஊரறிய திருமணம் நடக்கும் என்றும் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நயன்தாரா தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் திருமணம் குறித்த செய்தி வெளியே வந்தால் அவரது மார்க்கெட் பாதிக்கப்படும் என்பதால் திருமணத்தை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார் என்பதும் இன்னும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு ஐந்து முதல் ஏழு கோடிகள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்தால் தனது மார்க்கெட் போய்விடக்கூடாது என்பதற்காகவே திருமணத்தை மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து விக்னேஷ் சிவன் அல்லது நயன்தாரா வெளிப்படையாக தெரிவித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version