சினிமா செய்திகள்

ஒரு நாளுக்கு ரூ.50 லட்சம்: நயன்தாரா கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சி அடைந்த படக்குழு!

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு நாளுக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் கேட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இதனை அடுத்து அவர் மேலும் 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவருடைய கால்ஷீட் மொத்தம் 20 நாட்கள் என்ற நிலையில் 20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் என்ற வகையில் 10 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

இந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கே அவ்வளவு சம்பளம் இல்லை என்ற நிலையில் நயன்தாராவுக்கு 10 கோடியா என படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அந்த கேரக்டருக்கு நயன்தாரா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை புக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகை நயன்தாரா ரூபாய் 5 கோடி மட்டுமே ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது அவரது சம்பளம் இரு மடங்காக உயர்ந்திருப்பதாக கூறப்படுவதால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version