சினிமா
நயன்தாரா வாடகைத்தாய் மூலம் பெற்ற ட்வின்ஸ் குழந்தைகளுக்கு இந்த பெயரைத்தான் வைத்திருக்கிறாராம்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் படத்தின் செட்டிலேயே காதலித்த நிலையில், இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
பல வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். ஆனால், கடைசி நேரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதி வழங்கப்படாத நிலையில், நடிகை நயன்தாரா மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் விக்னேஷ் சிவனுக்கு கழுத்தை நீட்டினார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார்.
ஆனால், நயன்தாரா 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், வெடித்த சர்ச்சையில், இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் ஆகி விட்ட தகவல் அறிந்த நிலையில், நெட்பிளிக்ஸ் உடன் சர்ச்சை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் திருமண வீடியோவே வெளியாகாது என்றும் கூறுகின்றனர்.
வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நடிகை நயன்தாரா அம்மாவான நிலையில், அந்த குழந்தைகளுக்கு வித்தியாசமாக உயிர் மற்றும் உலகம் என பெயர் வைக்கப்பட்டதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், உயிர் மற்றும் உலகம் மட்டுமே அந்த குழந்தைகளின் பெயர் இல்லை என்றும் அந்த குழந்தைகளின் முழு நீளப் பெயர் இதுதான் என நேற்று நடந்த பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் பங்கேற்ற நயன்தாரா அறிவித்துள்ளார்.
உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என குழந்தைகளின் பெயர்களுக்கு கடைசியில் முதலில் நயன்தாராவின் N வருவது போலவும் கடைசியில் விக்னேஷ் சிவனின் சிவன் வருவது போலவும் பெயர் வைத்துள்ளார்.