சினிமா செய்திகள்

நயன்தாராவின் இரண்டாவது கணவர் தான் விக்னேஷ் சிவனா? ஜோதிடர் செய்யும் பரிகாரம்!

Published

on

ஜாதகத்தில் உள்ள தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பாக நடிகை நயன்தாரா மரத்தை திருமணம் செய்ய போவதாகவும், அதனை அடுத்தே அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்வார் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்றதும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாராவின் ஜாதகப்படி அவருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் அவருக்கு முதலில் மரத்துடன் திருமணம் செய்து வைத்து விட்டு அதன் பிறகு விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்துவைக்க ஜோதிடர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் அதேபோல் செய்ய நயன்தாராவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த சம்பிரதாயங்கள் சாஸ்திரங்கள் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து மரத்தை திருமணம் செய்த பின் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் மரம்தான் நயன்தாராவின் முதல் கணவர் என்றும் அதன் பின்னர் விக்னேஷ் சிவன் அவருக்கு இரண்டாவது கணவராக இருப்பார் என்றும் கூறப்படுவதால் செவ்வாய் தோஷம் கழிந்துவிடும் என்று ஜோதிடர்கள் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version