சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலி அடுத்த படத்தில் நயன்தாரா: சூப்பர் அறிவிப்பு

Published

on

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி ஏற்கனவே ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி சாதனை செய்திருக்கும் நிலையில் ’பாகுபலி’க்கு முந்தைய கதை ஒன்றை நெட்பிளிக்ஸ் ஓடிடி இணையதளத்திற்காக இயக்க திட்டமிட்டுள்ளார் இந்த தொடரில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த தொடரின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்தத் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரின் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்ற செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பிரமாண்ட படங்களுக்கு இணையாக இந்த வெப்தொடர் தயாரிக்கப்படும் என்றும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த தொடரில் மேலும் சில தென்னிந்திய மற்றும் வட இந்திய நடிகர்கள், நடிகைகள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

பாகுபலி படத்தின் முந்தைய கதை என்றால் ரம்யா கிருஷ்ணன் கேரக்டரான சிவகாமி கேரக்டரின் இளவயது கேரக்டராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version