சினிமா
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா…வைரலாகும் வீடியோ…..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடித்தாலே படம் ஹிட்தான் என்கிற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். கண் தெரியாத பெண்ணாக அவர் நடித்து வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அடுத்ததாக அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து அவர் கிளம்பும்போது ரசிகர்களின் கூட்டத்தில் அவர் சிக்கிவிட்டார். பின்னர் ஒருவழியாக படக்குழுவினர் காரில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thalaivi ????????????#LadySuperstar #Nayanthara
Ladysuperstar Mass Craze Fans Following ????????????
Thalaivi At Shooting Spot In Pondicherry ????❤ #LadySuperstarNayanthara pic.twitter.com/6UvZfsZLKq— DVVR (@DVVR64278894) August 21, 2021