சினிமா செய்திகள்

இன்று முதல் ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாரா திரைப்படம்!

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் நயன்தாரா நடித்த திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ’நிழல்’. இந்த திரைப்படம் கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படம் மேற்கொண்டு திரையரங்குகளில் திரையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை என்பதால் தற்போது ஓடிடியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று முதல் ’நிழல்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் குஞ்சாக்கோ போபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை அப்பு என்.பட்டதாரி என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version