சினிமா செய்திகள்
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்: டைட்டில் பாடல் ரிலீஸ்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தை மிலந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் பாடலை பூர்வி கெளடிஸ் என்பவர் பாடியிருக்க கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்த இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
பார்த்தவை மறந்து போகலாம், பதைக்கும் பாவங்கள் செய்தோர் பிம்பங்கள் போகாதே என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.