சினிமா செய்திகள்
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் அடுத்த படம்! அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தினால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களுக்கு ஓடிடி மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதனை அடுத்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெற்றிக்கண்’. இந்த படத்தில் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டீசர் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.