Connect with us

சினிமா

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் எப்படி? திரைவிமர்சனம்

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படமான ‘நெற்றிக்கண்’ படத்தின் விமர்சனம் இதோ:

சகோதரருடன் காரில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தில் பார்வை இழந்த சிபிஐ அதிகாரி நயன்தாரா, பார்வை இழப்பு காரணமாக வேலையையும் இழக்கின்றார். இந்த நிலையில் நயன்தாரா, ஒருமுறை பேருந்து நிலையத்தில் இருக்கும் போது அவரை அஜ்மல் கடத்த முயற்சி செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் நயன்தாரா அவரைப் பற்றிய தகவல்களை காவல்நிலையத்தில் கொடுக்கிறார். அதன்பிறகுதான் தன்னைக் கடத்த முயன்றவன் ஏற்கனவே பல பெண்களை கடத்தி இருக்கிறார் என்பது நயன்தாராவுக்கும் போலீசுக்கும் தெரிய வருகிறது. இதனை அடுத்து நயன்தாராவின் உதவியுடன் வில்லனை பிடிக்க போலீஸ் எடுத்த முயற்சிதான் இந்த படத்தின் மீதிக்கதை.

பார்வையற்ற வேடத்தில் நயன்தாரா சூப்பராக நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பார்வை இல்லாமல் இருந்தாலும் மூன்றாவது கண்ணான நெற்றிகண் மூலம் மிகச் சிறப்பாக அவர் செயல்படுவது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. குறிப்பாக மெட்ரோ டிரெயினில் செல்லும்போது சரனண் சக்தி கூறும் தகவல்களிலிருந்து வில்லனிடம் இருந்து தப்பிப்பது, வில்லனிடம் நேருக்கு நேர் சவால் விடுவது, வில்லனிடம் மாட்டிக் கொண்ட போதும் ஒவ்வொரு முறையும் புத்திசாலித்தனமாக தப்பிப்பது ஆகிய காட்சிகள் நயன்தாராவின் நடிப்புக்கு தீனி போடும் காட்சிகளாக அமைந்துள்ளன.

நயன்தாராவை அடுத்து இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பது சரண் சக்தி தான். ஏற்கனவே ’கோலமாவு கோகிலா’ படத்தில் தனது நடிப்பு முத்திரையை பதித்த சரண் சக்தி இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளார்.

அஜ்மல் கேரக்டர் கொஞ்சம் முரணானது என்றாலும் அவரது நடிப்பில் எந்தவித குறையும் இல்லை. படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய ஓட்டைகள் உள்ளன. குறிப்பாக மேல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆளாகும் அஜ்மல் மேலதிகாரிகள் முன் திமிறாக பேசுவது நம்பும்படியாக இல்லை. அதே போல் அஜ்மல் மிக சாதாரணமாக ஜெயிலில் இருந்து தப்பிப்பது நயன்தாரா அடிக்கடி கையில் கிடைத்தும் வழக்கமான தமிழ் சினிமா வில்லன்கள் போல் கோட்டை விடுவது போன்ற அபத்தமான காட்சிகளும் உண்டு.

மொத்தத்தில் நயன்தாரா ஒரே ஒருவருக்காகவும் முன்பாதி திரைக்கதைக்காகவும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

author avatar
seithichurul
வணிகம்3 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!