சினிமா செய்திகள்

டப்பிங் தியேட்டரில் ரொமான்ஸ் செய்யும் நயன் – விக்னேஷ்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

விஜய்சேதுபதி, நயன்தாரா,சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ’கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக்கை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம்’ என்று ரொமான்ஸ் உடன் குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களில் உள்ள ரொமான்ஸை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பொதுவாக தனது படங்களுக்கு டப்பிங் குரல் கொடுப்பதில்லை. ஆனால் இந்த படத்தில் விக்னேஷ் சிவனுக்காக தானே டப்பிங் செய்ய முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version