சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ரா போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை? நயன்தாரா அதிரடி முடிவு?

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது போல நடிகை நயன்தாராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்கள் என்பதும் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவருக்கும் இடையே திருமணம் நடந்து விட்டதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு நடிகை நயன்தாரா வந்த போது நெற்றி வகிட்டில் பொட்டு வைத்து இருந்ததைஅடுத்து அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் திருமணமான பெண்கள் மட்டுமே இவ்வாறு பொட்டு வைப்பார்கள் என்றும் சமூகவலைதளங்களில் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் பிஸியாக இருக்கும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் அதனால் பிரியங்கா சோப்ரா போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவை அனைத்துமே சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்து தான் என்பதும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை விஷயத்த்ல் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version