சினிமா செய்திகள்
சிம்பு படத்தில் அறிமுகமாக வேண்டிய நயன்தாரா: மிஸ் ஆனது எப்படி?
தமிழில் சரத்குமார் நடித்த ’ஐயா’ என்ற திரைப்படத்தில் தான் நயன்தாரா அறிமுகமானார் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் அதற்கு முன்னரே சிம்புவின் படத்தில் நடிக்க தான் முதன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அது முடியாமல் போனதால் மிஸ் ஆகிவிட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ என்ற திரைப்படத்தில் முதலில் நாயகி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இயக்குனர் துரை மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ஆகிய இருவரும் இன்னொரு மலையாள நடிகையான கோபிகா இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதியதால் கோபிகாவை ஒப்பந்தம் செய்ததாகவும் இதனால் தொட்டி ஜெயா படத்தில் நயன்தாரா அறிமுகம் ஆக வேண்டியது மிஸ் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சிம்பு நடித்த வல்லவன் உள்பட ஒருசில படங்களில் நயன்தாரா அதன்பின்னர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் அவர் ரஜினியின் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.