சினிமா செய்திகள்

ஷாருக்கானின் ‘லயன்’ டிராப்? அட்லி மீது செம கோபத்தில் இருக்கின்றாரா நயன்தாரா?

Published

on

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வந்த ‘லயன்’ படம் கிட்டத்தட்ட டிராப் என கூறப்படுவதால் இயக்குனர் அட்லி மீது நடிகை நயன்தாரா கோபத்தில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,. அட்லியின் வற்புறுத்தலுக்காக ஷாருக்கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டர். இந்த படத்திற்காக அவர் மூன்று தமிழ் படங்களில் நடிப்பதை தியாகம் செய்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘லயன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்குள் ஷாருக்கான் வேறு படத்தின் படப்பிடிப்பிற்கு சென்று விட்டார். எனவே அட்லியின் ‘லயன்’ படம் கிட்டத்தட்ட டிராப் என்று கூறப்படுகிறது

ஆனால் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒரு சிலர் மட்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக புரளி கிளப்பி வருகின்றனர்

இந்த நிலையில் ‘லயன்’ படம் கிட்டத்தட்ட டிராப் என்று கூறப்படுவதை கேட்டு அட்லி மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருக்கிறாராம். பாலிவுட்டின் எண்ட்ரியான முதல் படமே டிராப் என்பதால் தன்னை ராசியில்லாத நடிகை என்ற முத்திரை பாலிவுட்டில் குத்தப்பட்டுள்ளதாக அவர் தனது கவலையை தெரிவித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version