சினிமா செய்திகள்

சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா: என்ன காரணம்?

Published

on

பிரபல நடிகை நயன்தாரா சென்னை மேயர் ப்ரியா ராஜனை சற்றுமுன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்பதும் சென்னை மேயராக ப்ரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு மேயர் ப்ரியா ராஜன் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது அதே கோவிலுக்கு நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார். இதனை அடுத்து தற்செயலாக சென்னை மேயர் ப்ரியா ராஜன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version