சினிமா

குழந்தைகளை விட்டு விட்டு குல தெய்வம் கோயிலில் வழிபாடு நடத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன்!

Published

on

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தின் சர்ச்சை காரணமாக அமைதியாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் லைம் லைட்டில் வந்துள்ளனர்.

திருமணத்துக்கு முன்பே கணவருடன் குழந்தை வரம் வேண்டி ஏகப்பட்ட கோயில்களுக்கு நயன்தாரா சென்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் லேடி சூப்பர்ஸ்டார் குல தெய்வ கோயிலில் வேண்டுதல் செலுத்தி உள்ளார்.

naanaan

தஞ்சை, வழுத்தூரில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தான் இயக்குஅர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலாம். திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது மீண்டும் அங்கே சென்று வழிபாடு நடத்தி உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மும்பைக்கு ஷூட்டிங் செல்லும் போது கூட கையில் உயிரையும் உலகத்தையும் கொண்டு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் போது ஏன் குழந்தைகளை அழைத்துச் செல்லவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

wikki

ஷாருக்கான் உடன் ஜவான் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்ட நயன்தாரா அந்த படத்தின் வெளியீட்டிற்காக வெயிட் செய்து வருகிறார். மேலும், ஜெயம் ரவி உடன் தனி ஒருவன் படத்துக்கு பிறகு இறைவன் படத்தில் இணைந்து நடித்துள்ள லேடி சூப்பர் அந்த படத்தின் ரிலீசுக்காகவும் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், மேலும், சில தமிழ் படங்களிலும் நயன்தாரா கமிட் ஆக உள்ள நிலையில் தான் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளதாக கூறுகின்றனர்.

பிரதீப் ரங்கநாதனையும் நயன்தாராவையும் வைத்து எடுக்கப் போகும் படம் ஹிட் ஆக வேண்டும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் வேண்டிக் கொள்வதற்காகவே அங்கே சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version