சினிமா
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விருது : எதற்கு தெரியுமா?…
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். பட விழாக்கள், சுற்றுலா என எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்கின்றனர். அதோடு, அந்த புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் வயித்தெரிச்சலையும் கொட்டி வருகிறார் விக்னேஷ் சிவன்.
ஒருபக்கம் இருவரும் இணைந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றனர். தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் உருவானபோது ஒருகட்டத்தில் கூறிய பட்ஜெட்டுக்கு அதிகமாக செல்ல பின் வாங்கிவிட்டார் தனுஷ். எனவே, நயன்தாரா கொடுத்த பணத்தில்தான் அப்படத்தை எடுத்து வெளியிட்டார் விக்னேஷ் சிவன். தற்போது கூட நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தை இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
![nayanthara1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/nayanthara1.jpg)
நயன்தாரா
இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ என்கிற திரைப்படத்திற்கு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருது கிடைத்துள்ளது. அந்த உயரிய விருதை பெற்ற முதல் தமிழ் படம் என்கிற பெருமையை கூழாங்கல் பெற்றிருக்கிறது.
இந்த விருதை நயனுடம் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.