கேலரி

காதலரோடு சாமி தரிசனம் செய்த நயன்தாரா – தீயாய் பரவும் புகைப்படங்கள்….

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடித்தாலே படம் ஹிட்தான் என்கிற நிலையை அவர் உருவாக்கியுள்ளார்.

கண் தெரியாத பெண்ணாக அவர் நடித்து வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

nayan

அடுத்ததாக அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

nayan

ஒருபக்கம் அவ்வப்போது காதலன் விக்னேஷ் சிவனுடன் சொந்த ஊர் கேரளா செல்வது, வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது, கோவிலுக்கு செல்வது என நயன்தாரா பிஸியாக இருக்கிறது.

nayan

இந்நிலையில், காதலர் விக்னேஷ் சிவனுடன் மஹாராஸ்டிராவில் உள்ள சீராடி சாய்பாபா, மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், மஹாலட்சுமி கோவில், மும்பாதேவி ஆகிய கோவில்களுக்கு சென்று அவர் வழிபட்டார். இது தொடர்பான் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara

Trending

Exit mobile version