உலகம்

சட்டிஸ்கரில் தூர்தர்ஷன் நிருபர் சுட்டுக்கொலை.. மாவோயிஸ்ட் தாக்குதலில் பலி

Published

on

ராய்பூர்: சட்டிஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் புகைப்பட நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர்.

சட்டிஸ்கரின் தாண்டேவாடா காட்டுப்பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது.

1 மணி நேரமாக இந்த சண்டை நடந்து இருக்கிறது. இதை அடுத்து இந்த சண்டை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் நக்சல் தாக்குதல் நடத்தி உள்ளது.

அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தூர்தர்ஷன்  செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் தூர்தர்ஷன் புகைப்பட நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். நக்சல் நடத்திய தாக்குதலில் இன்னும் பலர் காயம்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version