இந்தியா

24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடும்: மூத்த தலைவர் நட்வர் சிங் பகீர்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை வலியுறுத்தினார். இந்நிலையில் புதிய தலைவராக பிரியங்கா காந்திக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏற்காமால் இருந்தாலும் அவர் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார். தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வலியுறுத்தினார். ராகுலை சமாதானப்படுத்த முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் புதிய நபரைத் தேடும் படலம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வரவேண்டும் என வெளிப்படையாக காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பிரியங்கா காந்தி தான் அடுத்த தலைவராக வர வேண்டும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங்கும் பிரியங்கா காந்தி தலைவராக வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங், சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்ததை பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அற்புதமானது. அவர் கிராமத்திலேயே தங்கி அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக வரமாட்டார்கள் என ராகுல் தெரிவித்துவிட்டார். ஆனால், தலைவர் பதவிக்கு தகுதியானவர் பிரியங்கா காந்திதான் என்று இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. காந்தி குடும்பத்தாரை தவிர வேறு யாராவது தலைவராக வந்தால் 24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும் என்றார் அதிரடியாக.

Trending

Exit mobile version