Connect with us

இந்தியா

24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடும்: மூத்த தலைவர் நட்வர் சிங் பகீர்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை வலியுறுத்தினார். இந்நிலையில் புதிய தலைவராக பிரியங்கா காந்திக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏற்காமால் இருந்தாலும் அவர் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார். தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வலியுறுத்தினார். ராகுலை சமாதானப்படுத்த முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் புதிய நபரைத் தேடும் படலம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வரவேண்டும் என வெளிப்படையாக காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பிரியங்கா காந்தி தான் அடுத்த தலைவராக வர வேண்டும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங்கும் பிரியங்கா காந்தி தலைவராக வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங், சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்ததை பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அற்புதமானது. அவர் கிராமத்திலேயே தங்கி அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக வரமாட்டார்கள் என ராகுல் தெரிவித்துவிட்டார். ஆனால், தலைவர் பதவிக்கு தகுதியானவர் பிரியங்கா காந்திதான் என்று இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. காந்தி குடும்பத்தாரை தவிர வேறு யாராவது தலைவராக வந்தால் 24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும் என்றார் அதிரடியாக.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!