பல்சுவை
வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?
![Locust and Grasshoppers - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/05/Locust-and-Grasshoppers.jpg)
சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தை நம்முள் பலரும் பார்த்திருப்போமா என்று தெரியாது.
அதில் ஒரு காட்சியில், கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தையும் தின்று அழித்துவிடும். அப்படி இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைக் கூட்டமாகச் சென்று அழிக்க தொடங்கியுள்ளன.
இப்படி விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழிக்கத் தொடங்கினால், உணவு பற்றாக்குறை பெரும் அளவில் அதிகரிக்கும். எனவே தமிழகத்துக்கு இது போன்ற ஒரு பாதிப்பு வருவதற்கு முன்பு அதிலிருந்து நம்மை இயற்கை முறையில் தற்காத்துக்கொள்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பூண்டு தண்ணீர் தெளித்தல்
பூண்டு தண்ணீரைப் பயிர்களின் மீது தெளிக்கும்போது அது வெட்டுக்கிளிகள் மட்டுமல்லாமல் பிற பூச்சிகளைக் கொல்லும். எனவே இரண்டு முழு பூண்டுக்கு 10 கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு இரவு முழுவதும் அந்த நீரை வைத்திருந்து காலையில் அதை பயிர்களின் மீது தெளித்தால் வெட்டுக்கிளிகள் பயிர்களை அண்டாது.
விட்டில் உள்ள மாவை வைத்து வெட்டுக்கிளிகளை அளிப்பது எப்படி?
பசைக்கு பயன்படுத்தும் மாவு பொருட்களை அப்படியே பயிர்களின் மீது தூவி விடுவதன் மூலம் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதை சாப்பிடும் போது வெட்டுக்கிளிகளின் வாய் ஒட்டிக்கொள்ளும் பயிர்களை அழிக்க முடியாது.
பறவைகள் மற்றும் கோழிகள்
பறவைகள் மற்றும் கோழிகள் இயற்கையாகவே வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்பவை. எனவே அவற்றை விளை பயிர்களுக்கு இடையில் விடும் போது வெட்டுக்கிளிகளைத் தின்று அளித்துவிடும்.
இவை பெரும் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து எந்த அளவிற்கு அளிக்கும் என்பது மட்டும் தரவில்லை. இருப்பினும் இதுபோன்ற ஒரு மோசமான சூழல் தமிழ்நாட்டிற்கு வரும் முன்பு நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
தமிழ்நாட்டிற்கு இப்படிப் பாதிப்பு வரவில்லை என்றாலும், பயிர்களை அழித்து வரும் சில வெட்டுக்கிளிகள் மற்றும் பூச்சிகளை இப்படி அழிக்கலாம்.