தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து வேட்புமனு செய்த வேட்பாளர்: எந்த கட்சியை சேர்ந்தவர் தெரியுமா?

Published

on

நத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள ஐஜேகே கட்சியின் நத்தம் வேட்பாளர் சரண்ராஜ் என்பவர் இன்று நத்தம் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் அவர் தேர்தல் அலுவலத்திற்கு தனது ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ஊர்வலமாக வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் ஜல்லிக்கட்டு காளைகள் தேர்தல் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் மீண்டும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக தனது வீட்டிற்கு சென்றார்.

வேட்பாளர் சரண்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது அவருடன் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் வந்திருந்தனர் என்பதும் இந்த ஊர்வலத்தில் வந்த அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version