கிரிக்கெட்

நாளை மறுநாள் முதல் டி-20 போட்டி: நடராஜன் இடம்பெறுவாரா?

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது மார்ச் 12ம் தேதி முதல் டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 தொடருக்கான இந்திய அணியின் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியில் இடம் பெறுவாரா என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை, இருப்பினும் அவர் இந்த தொடரில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் ராகுல் சஹார் இந்த போட்டியில் உறுதியாக விளையாடுவார் என்றும் அதேபோல் உடல் தகுதியில் தோல்வியடைந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் திவாரி ஆகிய இருவரும் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. டெஸ்ட் தொடரை வென்றது போலவே டி20 தொடரையும் இந்திய அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Trending

Exit mobile version