சினிமா செய்திகள்

சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம்: வெற்றி பெற்ற நாசர் பேட்டி!

Published

on

சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம் என்றும் எடுத்துக்கொண்ட வேலையில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நேற்று எண்ணப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளில் அடிப்படையில் பாண்டவர் அணி முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து நடிகர் சங்க தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். மேலும் துணை தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது மிகவும் நன்றி என்றும் எங்களுக்கும் எதிரணியினருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார் .

மேலும் எங்கள் அணி, எதிர்ப்பு அணி என்பது இனிமேல் கிடையாது என்றும் இரண்டும் ஒரே அணிதான் என்றும் எதிர் அணிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் சிறுபிள்ளைத்தனமாக எடுக்க மாட்டோம் என்றும் கூறினார் .

மேலும் எங்களுக்கு மிகப்பெரிய பணி காத்திருக்கிறது என்றும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்கும் பணியை தொடங்க உள்ளோம் என்றும் இதற்காக முதலில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி நடிகர் சங்க கட்டிடத்தின் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை உள்ளேன் என்றும் கூறினார்.

 

seithichurul

Trending

Exit mobile version