Connect with us

உலகம்

இரண்டாவது பூமியை கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்: மனிதர்கள் வாழ்கிறார்களா?

Published

on

பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதால் அதில் ஏற்கனவே மனிதர்கள் வாழவோ அல்லது இனிமேல் மனிதர்கள் வாழவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாசா கண்டுபிடித்த கிரகம் பூமி அளவிலான வடிவமைப்பில் இருப்பதாகவும், மனிதர்கள் வாழக்கூடிய அளவில் இருப்பதாகவும், திரவ நீர் மேற்பரப்பில் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே சாட்டிலைட்டின் டேட்டா தகவலின்படி இந்த கிரகம் TOI 700 e என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதாகவும், 95% நீர் மற்றும் பாறைகள் நிறைந்ததாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

இதே அமைப்பில் TOI 700 b, c மற்றும் d என அழைக்கப்படும் மூன்று கிரகங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய கூடுதலாக ஒரு வருடம் தேவைப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் முதுகலை பட்டதாரியான எமிலி கில்பர்ட் கூறியபோது, ‘எங்களுக்குத் தெரிந்த பல சிறிய, வாழக்கூடிய-மண்டலக் கோள்களைக் கொண்ட கிரகங்களில் இதுவும் ஒன்றாகும். இது TOI 700 அமைப்பை கொண்டது’ என்றார்.

TOI 700 என்பது ஒரு சிறிய, குளிர்ந்த நட்சத்திரம் என்றும், இது டோராடோவின் தெற்கு விண்மீன் தொகுப்பில் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்றும், 2020 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் சிலர் இந்த கிரகத்தை கண்டுபிடித்தாலும் தற்போது தான் கூடுதல் தகவல் கிடைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!