உலகம்
செவ்வாயில் இன்று கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் ரோபோட்.. சிறப்பு என்ன?
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று செவ்வாய் கிரகத்தில் களமிறங்க உள்ளது.
உலக வரலாற்றில் இன்று நாசா மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்ய போகிறது. மனித குலத்தின் வரலாறு மட்டுமில்லாமல் மொத்த உலகத்தின் வரலாற்றையும் நாசா கண்டுபிடிக்க உள்ளது.
ஆம் நாசா செவ்வாயை ஆராய்ச்சி செய்ய அனுப்பி இருக்கும் இன்சைட், இன்று இரவு செவ்வாயில் களமிறங்க உள்ளது. இது உலக வரலாற்றை கண்டுபிடிக்க உள்ளது.
உலக நாடுகள் ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி செய்ய ரோபோட்கள், விண்கலம் ஆகியவற்றை அனுப்பி உள்ளது. செவ்வாயில் இதுவரை இறங்கி வெற்றிபெற்ற திட்டங்கள் என்று பார்த்தால், வைகிங் 1, வைகிங் 2, பீனிக்ஸ், க்யூரியாசிட்டி, ஸ்பிரிட், மார்ஸ் பாத் பைண்டர், ஆபர்ஜுனிட்டி ஆகிய நாசாவின் திட்டங்களும், மார்ஸ் 3 என்ற ரஷ்யாவின் திட்டமும் மட்டுமே ஆகும்.
இந்த நிலையில்தான் நாசா தற்போது இன்சைட் ரோபோட்டை செவ்வாய்க்கு அனுப்பி இருக்கிறது. கடந்த மே மாதம் 5ம் தேதி செவ்வாயை நோக்கி, நாசா தனது இன்சைட் விண்கலத்தை அனுப்பியது. நாசா கடந்த முறை பீனிக்ஸ் விண்கலத்தை எப்படி அனுப்பியதோ அதேபோல்தான் இதையும் அனுப்பியது. பீனிக்ஸ் விண்கலம் செவ்வாயில் இறங்கியது போலத்தான் இதுவும் அங்கு தரையிறங்கும்.