உலகம்
திடீர் சென்று காணாமல் போன ரோவர்.. 100 நாட்களுக்கு பின் செவ்வாயில் கண்டுபிடிப்பு
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர், தற்போது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
2011ல் அனுப்பப்பட்ட இந்த ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 7 வருடமாக மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறது.
இந்த புயல் காரணமாக ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் கொஞ்சம் கொஞ்சமாக ரோவரை நெருங்கி வரும் போது, அதை ரோவர் படம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் நாசா இந்த ரோவரை தற்போது கண்டுபிடித்து இருக்கிறது. செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் மார்ஸ் ரிகோனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) என்று செயற்கைகோள் இந்த ரோவரை படம் பிடித்து இருக்கிறது.