தமிழ்நாடு

தமிழகம் ஒரு போர்குரலை டெல்லிக்கு அனுப்புகிறது: வைகோவை புகழ்ந்து தள்ளும் நாஞ்சில் சம்பத்!

Published

on

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்டது. ஆனால் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வைகோ மாநிலங்களவைக்கு செல்ல உள்ளது குறித்து பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் வைகோவை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். அதில், வடக்கு செய்கிற இடக்கை, வடக்கிலே சந்திக்கிற வல்லமை உள்ள வாலிபர்களின் ஏவுகணை டெல்லி செல்கிறது. வண்ண மலர் பேரழகை சொல்லில் வைத்தவர் நாடாளுமன்றம் செல்கிறார். வரிப்புலியின் உருமலுக்கு ஓசை வைத்தவர் டெல்லி செல்கிறார்.

இந்தியாவை காவிமயமாக்க துடிக்கின்ற ஆசாட பூபதிகளுடைய அநியாய சேட்டைகளை அலைகடல் ஓசையில் கண்டிப்பதற்கு தமிழகம் ஒரு போர்குரலை டெல்லிக்கு அனுப்புகிறது. இந்த வாய்ப்பை அண்ணனுக்கு வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெரும்பாண்மை இருக்கிற காரணத்தினால் நினைத்ததையெல்லாம் நடத்திவிடலாம் என்று கருதுகிற பாசிச சக்திகளுக்கு வைகோ பயங்கர அச்சுறுத்தலாக இருப்பார். இதை நாடு பார்க்கப்போகிறது, நாடாளுமன்றத்தில் நாம் அதனை கேட்கப்போகிறோம் என்றார் நாஞ்சில் சம்பத்.

seithichurul

Trending

Exit mobile version