தமிழ்நாடு

கிரண்பேடி ஆணா, பெண்ணா என்று தெரியாது: நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு!

Published

on

டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அவர் அமமுகவை தொடங்கியதை அடுத்து அங்கிருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் மீது ஆளுநர் கிரண்பேடியை சர்ச்சைக்குறிய வகையில் விமர்சித்ததால் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பாக புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியஒ சேர்ந்த வைத்திலிங்கம் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுகவின் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய நாஞ்சில் சம்பத், இந்தியாவிலேயே 22 மாநிலங்களில் பாஜக கவர்னர். இங்கே ஒரு அம்மா கிரண்பேடி. அவர் ஆணா என்றும் தெரியாது, பெண்ணா என்றும் தெரியாது. என்ன அட்டகாசம், நான் கேட்கிறேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா நீங்கள்? என தெரிவித்தார். இந்நிலையில் கிரண்பேடி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version