சினிமா செய்திகள்
கொரோனாவிற்கு பிறகு நயன்தாராவின் லைன்அப்!
கோவிட்-19 ஊரடங்கைத் தொடர்ந்து 8 மாதங்களாகப் படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா, மீண்டும் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார்.
மலையாளத்தில் குஞ்சாக்க போபன் நடிக்கும் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மலையாள படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த, விக்னேஷ் ஷிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
தீபாவளிக்கு நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட போது தனது அம்மா மற்றும் கணவரின் பிறந்த நாளை கோவா சென்று நயன்தாரா கொண்டாடிய படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.