தமிழ்நாடு

‘தாமிர மல்ரும்… தமிலநாடு வள்ரும்…’- ‘கோ’ பட பாணியில் நமீதா பிரச்சாரம்; வைரல் வீடியோ!

Published

on

பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் அரவக்குறிச்சித் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். 

இதற்கு முன்னர் இரண்டு முறை போட்டியிட்டு அரவக்குறிச்சியில் வென்றுள்ள செந்தில் பாலாஜி, இந்த முறையும் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக தரப்பு அரவக்குறிச்சித் தொகுதியில் தீவிரப் போட்டியிட்டு வருகிறது. 

குறிப்பாக பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலர் அரவக்குறிச்சிக்கு நேரடியாக வந்து பிரச்சாரம் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகை நமீதா, அண்ணாமலைக்கு ஆதரவாக அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘அண்ணாமலேக்கு லீடருக்கான எல்லா குவாலிட்டீஸும் இருக்கு. என்னைப் பொறுத்துவரைக்கும் பாஜக கேண்டிடேட் அண்ணாமலை ரொம்ப ஹம்பிளான, பிரேவ் ஆளு. அதுக்காக தான் சொல்றேன் நான் சொல்றேன். திருப்ப திருப்ப சொல்றேன் அரவுக்குறிச்சில அண்ணமலைக்கு ஓட் போடுங்க. அரவுக்குறிச்சில தாமிரை மலரும். தமில்நாடு வளரும்’ என்று தமிழை புரட்டியெடுத்துப் பேசியுள்ளார். 

நமீதாவின் இந்தப் பேச்சை நெட்டிசன்கள், ‘கோ படத்தில் சோனா இப்படித்தான் பேசுவாரு’ என கிண்டல் செய்து வருகின்றனர். 

seithichurul

Trending

Exit mobile version