சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் கிணற்றில் விழுந்த நமீதா!
படப்பிடிப்பின் போது கிணற்றில் விழுந்த நமீதாவை காப்பாற்ற கிராம மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவர்ச்சி நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இருப்பினும் உடல் எடை கூடியதால் சிறிது தீவிர பயிற்சி எடுத்து விட்டு மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது பெளவ் வெளவ் என்ற திரைப்படத்தை தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்ற பெளவ் வெளவ் பட சூட்டிங்கில் நமீதா கலந்து கொண்டார். அப்போது போன் பேசிக்கொண்டிருந்த அவர், அருகில் கிணறு இருப்பது தெரியாமல் தடுக்கி விழ பார்த்தார். இதில் நமீதாவின் போன் கிணற்றை நோக்கிசச் செல்ல, அதனை பாய்ந்து பிடிக்க நமீதா முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் நமீதா விழுந்தார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், நமீதா கிணற்றுக்குள் விழுந்ததும் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால், படக்குழுவினரோ அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு தான் தெரிந்தது, நமீதா கிணற்றுக்குள் விழுந்ததும் சூட்டிங் என்று. நடந்த படப்பிடிப்பு காட்சிகளில் ஒன்று தான் என்று கிராம மக்கள் புரிந்தாலும், நமீதா கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக காட்டுத்தீ போல மற்ற கிராமங்களுக்கும் பரவியது.