உலகம்

ஹெலிகாப்டரில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய ராஜபக்சே குடும்பம்: வைரல் வீடியோ

Published

on

மகிந்தா ராஜபக்சேவின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டர்களில் தப்பி ஓடியதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் பொருளாதார சீரழிவுக்கு மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே காரணம் என குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர் .

நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது என்பதும் இலங்கை எம்பி ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி மஹிந்த ராஜபக்சேவின் சொந்த ஊரில் உள்ள அவரது வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதும் ஆளுங்கட்சியினர் யாரைப் பார்த்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version