தமிழ்நாடு
பள்ளி திறந்த இரண்டாவது நாளே மாணவிக்கு கொரோனா: நாமக்கல்லில் பரபரப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன என்பதும் மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் பள்ளி திறந்த இரண்டே நாட்களில் நாமக்கல் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டார்.
அதுமட்டுமின்றி அவருடைய வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி திறந்த இரண்டே நாளில் மாணவி ஒருவருக்கு ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் 86 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் மீண்டும் பள்ளியை மூடலாமா என்று ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.