தமிழ்நாடு

95 வயதில் கொரோனாவில் இருந்து மீண்ட நல்லக்கண்ணு: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Published

on

பழம்பெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முற்றிலும் குணமாகி வீடு திரும்பி உள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

95 வயதான நல்லகண்ணு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது. இதனை அடுத்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

95 வயதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமாகிய நல்லகண்ணு அவர்களுக்கு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நீண்ட ஆயுளோடு முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் 95 வயதில் தனது மன உறுதியால் கொரோனாவை வென்ற நல்லகண்ணுவுக்கு அவரது கட்சித் தொண்டர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version