தமிழ்நாடு
கைதில் எந்த முகாந்திரமும் இல்லை.. நக்கீரன் கோபாலை விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடி!
சென்னை: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்றும், அவரை விடுதலை செய்ய வேண்டும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காளை சென்னை விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல இருந்த நக்கீரன் கோபாலை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரைத் தொடர்புப்படுத்திக் கட்டுரை எழுதியதால் ஆளுநர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து தேசத்துரோக வழக்குக் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து இந்து பத்திரிக்கையாளர் ராம் எழும்பூர் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில் நக்கீரன் கோபால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கூறவில்லை என்று தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் எழுதப்பட்ட கட்டுரைக்குத் தற்போது கைது செய்தது முறையல்ல என்றும் நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். நக்கீரன் கோபாலை கைது செய்தால் இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் நாடெங்கும் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குத் தொடருவார்கள் என்றும் தெரிவித்தார்,
இதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கோபிநாத் 124 சட்டப்பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்றும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்..
விடுதலை செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நக்கீரன் கோபால் நீதிமன்றம் கருத்துச் சுதந்திரம் பக்கம் நின்றதால் தான் விடுதலை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.