இந்தியா
18 வருடங்களாக சோனியா வாக்குறுதியை காப்பாற்றவில்லை: நக்மா அதிருப்தி
18 வருடங்களாக தனக்கு கொடுத்த வாக்குறுதியை சோனியாகாந்தி காப்பாற்றவில்லை என நக்மா அதிருப்தியுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டு இருந்த நிலையில் இந்த பட்டியலில் தனது பெயர் இல்லை என்றவுடன் அதிருப்தி அடைந்த நக்மா, 18 வருடங்களுக்கு முன் நான் காங்கிரஸில் சேர்ந்த போது தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்குவதாக சோனியாகாந்தி வாக்குறுதி தந்தார் என்பதும் ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
நடிகை நக்மா கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் சேவை செய்து வருகிறார் என்பதும், தேர்தல் நேரத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்ற ஒரு நிலைமை இருந்ததால் தான் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். நக்மாவுக்கு இன்னும் பதவி கொடுக்காமல் அவருடைய பொறுமையை சோதித்தால் அவரும் கட்சி மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.