சினிமா

இதில்தான் பிரச்சனை துவங்கியது…சமந்தா விவாகரத்து பற்றி நாகார்ஜுனா கூறியது உண்மையா?

Published

on

நடிகை சமந்தாவும், அவரின் கணவர் நாக சைத்தன்யாவும் சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தனக்கு கொடுப்பதாக சொன்ன ஜீவனாம்சத்தை கூட வேண்டாம் எனக்கூறி மறுத்துவிட்டு கணவர் குடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டார் சமந்தா. மேலும், தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகரும், நாக சைத்தன்யாவின் அப்பாவுமான நாகார்ஜூன் சமீபத்தில் இவர்கள் இருவரின் விவாகரத்து பற்றி பேசியதாக ஒரு செய்தி வெளியானது.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் எப்படி பிரச்சனை உருவானது என எனக்கு தெரியவில்லை. கடந்த புது வருடத்தை இருவரும் கொண்டாடினார்கள். அதன்பின்னர்தான் பிரச்சனை உருவானது. சமந்தாதான் முதலில் விவாகரத்து கேட்டுள்ளர்’ என அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால், அப்படி தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என நாகார்ஜூனா மறுப்பு தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version