தமிழ்நாடு

கனமழை எதிரொலி: ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

Published

on

கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர் .

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார் .

ஆனால் அதே நேரத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கல்லூரிகளும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version