செய்திகள்
1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கன மழை காரணமாகவும் வெள்ளம் காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று திடீரென நாகை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
நாகை தஞ்சாவூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
இருப்பினும் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம்போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.