சினிமா செய்திகள்
நடிகர் சங்கம் தேர்தல்: 2 துணை ஆணையர்கள் தலைமையில் 400 காவல் துறையினர் பாதுகாப்புடன் தொடங்கியது!
தென் இந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் சென்னை மயிலாப்பூர் ஆர்கே சாலையில் உள்ள புனித எப்பா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
சென்ற முறை போலவே இந்த ஆண்டும் நடிகர் சங்க தேர்தல் மிகவும் பரபரப்புக்கு இடையில் தான் நடைபெறுகிறது. எனவே 400-க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி உள்ளிட்டவர்கள் போட்டியிடுகிறார்கள்.
சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசன் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.