சினிமா செய்திகள்

இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன்: நாடியா சாங்

Published

on

இன்னும் ஒரு வாரம் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன் என்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நாடியா சாங் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய தமிழ் பெண்ணான நாடியா சாங் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார் என்பது தெரிந்ததே/ இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த நிலையில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

குறிப்பாக அபிஷேக் குறித்து அவர் பேசியபோது ’அபிஷேக் என்னிடம் ரொம்ப ரொம்பவே வம்புக்கு இழுத்தார் என்றும் எனக்குள் இருக்கும் மிருகத்தை தட்டி எழுப்ப பல முயற்சி செய்தார் என்றும் ஆனால் நான் மிகவும் கஷ்டப்பட்டு என்னை அடக்கிக்கொண்டேன் என்றும் ஆனால் இன்னும் ஒரு வாரம் நான் உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சி செஞ்சுருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடியா சாங் தன்னை போலீஸ் அடித்ததாகவும் தனது அம்மாவே அடிக்க சொல்வதாகவும் கூறியதற்கு மலேசிய நபரொருவர் அது பொய் என்று கூறியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்/ எனக்கு என்ன நடந்தது என்பது எனக்குத்தான் தெரியும் இன்னொருவர் அதை பற்றி சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நமிதா மாரிமுத்து உண்மையில் ஏன் வெளியேறினார், அவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்விக்கே அவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் வெளியேறினார் என்றும் அதற்கு மேல் அங்கு என்ன நடந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது என்றும் ரகசியத்தை காப்பாற்றினார்/ இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version