தமிழ்நாடு

செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த சீமான்: மருத்துவமனையில் அனுமதி!

Published

on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தது அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை திருவொற்றியூரில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு இருக்கும் குடியிருப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் சீமான் களம் இறங்கினார். அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் சீமான் சந்தித்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் உடல்நிலை குறித்த தகவல் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version