தமிழ்நாடு
பாஜக பிரமுகரை அடுத்து நாடகமாடிய நாம் தமிழர் பிரமுகர்!
சமீபத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் தனது கார் எரிந்து விட்டதாக நாடகமாடி நிலையில் அதன் பின் போலீஸ் விசாரணையில் அவரே காரை தீ வைத்தது தெரியவந்தது .
அதேபோல் தற்போது மிளகாய் பொடி தூவிய லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளையடிக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறிய நிலையில் அவரே நடத்திய நாடகம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மிளகாய் பொடி தூவி கொள்ளை அடித்ததாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போது நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் சென்ற போது இரண்டு நபர்கள் மிளகாய் பொடி தூவி தாக்கிவிட்டு பணத்தைக் கொள்ளையடித்ததாக அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என்றும் அவரே பணத்தை அபேஸ் செய்து விட்டு நாடகமாடி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.