சினிமா

கொரோனாவுக்கு பின் வடிவேலு.. வைரலாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ புகைப்படம்…

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் லண்டன் சென்று இருந்தனர். லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். வடிவேலுவை அடுத்து இயக்குனர் சுராஜூக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் சிகிச்சையில் குணமடைந்தார்.தற்போது மீண்டும் அவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு பாடலை உருவாக்கும் பணி தற்போது லண்டனில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஈடுபட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version