உலகம்
ரணகளத்திலும் கிளுகிளுப்பு.. பின்னால் மிகப்பெரிய ரணுவ சதி நடப்பது கூட தெரியாமல் நடனமாடிய பெண்
மியான்மரில் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்கு வெளியே பெண் ஒருவர் தன்னுடைய வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மியான்மரில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி நேபாள ராணுவம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோர் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்பு அறிவிக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிதாக 11 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த ஒரு வருடத்திற்கு அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்தியா தேவையில்லாமல் மியான்மர் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இப்படி உலகமே கவனித்த முக்கியமான அரசியல் நடவடிக்கை தனக்கு பின்னல் நிகழ்ந்துகொண்டு இருந்த நேரத்தில் ஒரு பெண் எதையும் கவனிக்காமல் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மியான்மர் தலைநகரில் கிங் ஹின் எனும் பெண் வழக்கமாக தன்னுடைய ஏரோபிக்ஸ் எனும் உடற்பயிற்சியை நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே நின்று படம் பிடித்துக்கொண்டிருந்தார். இசையில் மூழ்கியபடி மிக தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டும் அதை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னல் ராணுவ கான்வாய்கள், வாகனங்கள் எல்லாம் வேகமாக நாடாளுமன்றத்திற்குள் சென்று கொண்டிருந்தது. மியான்மர் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடைபெறும் நிகழ்வை கூட அறியாமல் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை கிங் ஹின் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
அதுகுறித்து கூறியுள்ள கிங் ஹின், கடந்த 11 மாதங்களாக நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னாள் நின்று தான் உடற்பயிற்சி செய்வதாகவும் அன்றும் அதே போல் நடைபெற்ற வழக்கமான நிகழ்வு தான் என்றும் கூறியிருக்கிறார். 2021-க்கு ஒரு வீடியோவை குறிப்பிடலாம் என்றால், உங்கள் பின்னால் மிகப்பெரிய அரசியல் சதித்திட்டம் நடைபெற்று கொண்டிருப்பதை கூட தெரியாமல் உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவை குறிப்பிடலாம் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
மியான்மரில் நேர்மையான தேர்தல் நடைபெற்ற பின்பு மீண்டும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ராணுவம் தற்போது கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Una mujer hizo su clase de aerobic sin darse cuenta de que estaban dando el golpe de Estado en Myanmar. Y pues puede verse como el convoy de militares llega al parlamento. pic.twitter.com/fmFUzhawRe
— Àngel Marrades (@VonKoutli) February 1, 2021